உங்களையும் இந்த வலைப்பூவோடு இனைத்துக்கொள்ளுங்கள்
............................... வாழ்க வளமுடன்........................................
...................................கோவை பிரபா..........................................

Tuesday, February 15, 2011

லெல்லிக்கனி பயன்கள்

வைட்டமின் “சி” நிறைந்தது நெல்லிக்கனி. அதன் அற்புதமான மருத்துவக்குணங்களைப் பார்ப்போம்.
  1. உமிழ்நீர் சுரப்பிகளை தூண்டி விடுகிறது.
  2. பற்களுக்கு உறுதியைத் தருகின்றன
  3. கல்லீரல் குறைப்பாட்டை நீக்குகிறது
  4. இறைப்பை அழற்சியை போக்கி அல்சர் வராமல் தடுக்கிறது.
  5. மூல நோய்க்கு மிகச்சிறந்த மருந்து.
  6. சீரான இரத்த ஓட்டம் நடைபெற உதவுகிறது
  7. இதயம் பலம் பெற உதவுகிறது
  8. ரத்த ஓட்டம் நடைபெறும் போது  நச்சுக்கிருமிகள் பரவாமல் தடுக்கிறது
  9. கொழுப்பைக் குறைக்கிறது
  10. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது
  11. இரத்த்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கிறது
  12. சளியை வெளியேற்றி, சுவாசமண்டலத்தை சீராக வைக்கிறது.
  13. நீண்டநாளாக இருந்து வரும் இருமல், சளி, ஆஸ்துமா, எலும்புருக்கி நோயை குணபடுத்தும் அருமருந்து.
  14. பக்கவாதம், நரம்புதளர்ச்சி வராமல் தடுக்கிறது
  15. நுண்ணறிவை அதிகரிக்கிறது
  16. கர்ப்பபையை உறுதிபடுத்துகிறது
  17. சிறுநீரகக் கோளாருகளை நீக்குகிறது
  18. தோல் வியாதி போக்கி, சரும பளபளப்பைக் கொடுக்கிறது.
  19. இரத்த சுத்தகரிக்கும் ஒரு நல்ல இயந்திரம்.
  20. தலைமுடி உதிர்வதை தடுக்கிறது.
  21. எப்போதும் இளமையாக இருக்க உதவுகிறது.
  22. காய்ச்சல் வருவதை தடுக்கிறது.
  23. நோய் எதிர்ப்பை வளர்க்கிறது.
  24. காயங்கள், வீக்கம் போன்றவற்றால் ஏற்படும் வலியை போக்கி குணப்படுத்த உதவுகிறது.
  25. கண்பார்வை அதிகரிக்க உத்வுகிறது
  26. கண் எரிச்சல், நீர்வடிதல், கண் சிவத்தல் போன்ற க்ண் சம்பந்தப்பட்ட நோய்களை குணபடுத்துகிறது.
  27. இரத்ததில் உள்ள குளுக்கோசின் அளவை குறைத்து சர்க்கரை அளவை சரிபடுத்துகிறது.
அப்புறம் என்ன, வாரத்திற்க்கு இரண்டு நெல்லிகனி சாப்பிட ஆரம்பிங்க.

Friday, February 11, 2011

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.

 
ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு
இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.
இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு படித்தேன்.
அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதெ இந்த பதிவுன் நோக்கம்.
எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.
வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.
வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிறதுதான்).
இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதளத்தில் சொன்னது போல்):
(
¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மணிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,
பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,
அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...
நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதளத்தில் அலைந்தபோது படித்ததில் சில :
துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல் உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.
திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திறன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
  1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொறுக்க முடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.
  2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

Monday, February 7, 2011

வலைப்பூ பதிவை எளிதாக்க இலவச மென்பொருள்

நமக்குத் தேவையான தகவல்களை பதிந்து தேவையானபோது நமது வலைப்பூவில்(blogger, wordpress எதுவானாலும்) வெளியிட இந்த இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கம்யூட்டரில் இனைத்து, பின்பு மிக இளகுவாக நமது வலைப்பூவில் தகவல்களை வெளியிடலாம். இனைய முகவரி, விண்டோஸ் எக்ஸ்.பி என்றால் http://explore.live.com/windows-live-writer-xp , விண்டோஸ் 7 என்றால் http://explore.live.com/windows-live-writer?os=winxp என்ற தளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்யவும்.

Wednesday, February 2, 2011

ஒற்றைத் தலைவலியா? அப்ப இந்த செய்தி உங்களுக்குத்தான்.

வெள்ளை எள்ளை எருமைப்பால் விட்டு அரைச்சி, முன் நெற்றியில பத்து போட்டு, சூரியன் உதிக்கிறப்ப வர்ற வெளிச்சத்துல காட்டிட்டு வந்தா.. மூணே நாள்ல ஒற்றைத்தலைவலி சரியாப் போயிடும்.

சைனஸ் பிரச்சைக்கு....

சைனஸ் குணமாகணும்னா நொச்சி இலை சாறு எடுத்து, நல்லெண்ணெய் விட்டு நல்லா காய்ச்சி, சூடு ஆறினதும் தலைக்கு தேய்ச்சு ஒரு மணி நேரம் கழிச்சு வெந்நீர்ல குளிக்கணும். இதை, வாரத்துக்கு ஒருநாள் இல்லைனா ரெண்டு நாள்னு...ரெண்டு மாசம் வரைக்கும் செஞ்சாலே.. சைனஸ் சரியாப் போயிடும். தலைவலியும் சரியாயிடும்.

Tuesday, February 1, 2011

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கவணத்திற்கு

இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று உணவில் அதிக உப்பு சேர்த்துக்கொள்ளுவதும் ஆகும். இந்த உப்பு நமது உடலில் உள்ள இரத்தத்தில் சேர்ந்து இரத்ததின் வேகத்தை அதிகரிக்கிறது. இதுவே இரத்த அழுத்தமாகும். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு டாக்டர்கள் ஆலோசனை வழங்குவது, உணவில் உப்பை குறைப்பதுதான். இன்னும் சொல்லப்போனால், உப்பில்லாத உணவு வழங்குவதும் உண்டு.  ஆக இரத்த அழுத்தம் வராமல் இருப்பதற்கும், வந்த இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் ஒரு சிறந்த வழி சொல்கிறேன்.  பொதுவாக, நாம் பயன்படுத்தும் உப்பில் சோடியம் குளோரைடு உள்ளது. இதுவே ஆபத்து. இதற்குப்பதிலாக நாட்டுமருந்து கடைகளில் இந்துப்பு அல்லது இந்து உப்பு அல்லது டைமன் உப்பு என்று கேட்டு வாங்குகள். இது வடிவத்தில் கற்கண்டு கட்டி போல் இருக்கும். தூளாகவும் கிடைக்கும். விலை கிலோ சுமார் ரூ. 40/-  இருக்கும். இந்த உப்பு மலையிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இதில் பொட்டாசியம் குளோரைடு உள்ளது. இது நாம் பயன் படுத்தும் உப்பு போலவே இருக்கும். சுவை மாறாது. உடலுக்கு எந்த ஆபத்தும் கிடையாது. உப்பை குறைக்க வேண்டியதில்லை. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. அதிக இரத்த அழுத்த்தம் உள்ளவர்கள் உடனே மாற்றுங்கள் உப்பை.

Tuesday, January 18, 2011

எடை குறைத்து சிக்குன்னு இருக்க

எடை குறைந்து, நமது உயரத்துக்கு ஏற்ற எடை (உயரத்துக்கு ஏற்ற எடை எப்படி அறிவது. மிகச்சுலபம், அதாவது உங்கள் உயரம் 160செ.மீ என்று வைத்துக்கொள்வோம், அப்ப எடை என்பது 160-100=60 அதாவது 60கி.லோ இருக்க வேண்டும்.) இருக்க நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் மாவுசத்து மிகக் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் இருக்க வேண்டும். காரணம், மாவுசத்து உடலில் எடை போடும், புரதசத்து உடலுக்குத் தேவையான சத்துக்களை தரும். அதாவது "எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை விட எதைச் சாப்பிடுகிறோம் என்பது முக்கியம்."
^ Scroll to Top